வாய்ப்புண் சரியாக - பாட்டி வைத்தியம்

அடங்கொப்பனே! என்ன நாற்றம்டா சாமி! அருகிலே நிற்கமுடியவில்லை! எப்படித்தான் கூட இருப்பவர்களும், அவர்களுடன் வேலை செய்பவர்களும் அந்த நாற்றத்தை தாங்கிக் கொள்கிறார்களோ? அல்லாஹ் ஒருவனுக்கத்தான் புரியும்! காரணம் வாய்ப்புண் இருந்தால் வாய்த்துர்நாற்றம் அடிக்கும். வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புன்வரும். காரணம் அதிகமான அளவில் காரம், சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை போன்ற காரணங்களினால் இதுபோன்ற குறைகள் நமது மக்களிடம் காணப்படும்! 
வாய்ப்புண்
பெரும்பாலான மக்கள் இதுபோன்ற எளிய வைத்திய முறைகளை விரும்புவதில்லை காரணம் மாடர்ன் உலகில் பயணித்துக் கொண்டியிருப்பதால் பழமை வாய்ந்த மருத்துவ முறைகளை கண்டுகொள்வதில்லை. நாம் மாடர்னாக வாழவேண்டியதுதான் அதற்காக நமது ஆரோக்கியத்தை இழந்துவிடக் கூடாது என்பது உண்மை. 
அவசியமென்றால் மற்ற வைத்தியத்தை விரும்புவதில் தப்பில்லை ஆனால் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு நமக்கு தெரிந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தி பலன்பெருவதற்கு முயலுங்கள். இன்ஷா அல்லாஹ்..பயன் பெறலாம்...! 
-----
வாய்ப்புண் சரியாக பாட்டி வைத்தியம்
கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது. பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான். வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை பாலோ பண்ணுங்க
மஞ்சள் 
எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.
நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
புதினா இலை
புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும். 
வெந்தைய இலை
வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
துளசி இலை
ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ
துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.
வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்.

No comments:

Post a Comment

 
Blogger Widgets